Posts

Showing posts from September, 2014

வேதாள மாயாத்மா

Image
                                       சித்திரக்கதைகளில் வேதாளர் என்றழைக்கப்படும் மாயாவியை அறியாதவர்கள் இருப்பது கடினமே! 1936 - ம் ஆண்டில் லீ ஃ பாக் என்பவரால் வேதாளர் உருவாக்கப்பட்டவர். உலகம் முழுவதும் உள்ள    பல சித்திரக்கதை நாயகர்களுக்கு மத்தியில் இன்றும் அளவிட முடியாத வாசகர்களை பெற்றுள்ளார். 25 க்கும் மேற்பட்ட மொழிகளில் இவரின் சித்திரக்கதைகள் வெளிவந்துள்ளன. தமிழில் இந்திரஜால் காமிக்ஸ், வித்யார்த்தி மித்ரம் காமிக்ஸ், ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் மற்றும் குமுதம், மாலைமலர், இன்னும் சில நாளேடுகளில் தொடராகவும் வெளிவந்துள்ளார்.  1975 – ம் ஆண்டில் வித்யார்த்தி மித்ரம் காமிக்ஸில்   வெளிவந்த வேதாளரின் கதைகளில் ஒன்றான கப்பல் கில்லாடிகளை உங்களுடன் பகிர்ந்துள்ளேன். படித்து விட்டு உங்கள் எண்ணங்களை மறவாமல் தெரியப்படுத்துங்கள். நன்றி!        பின் குறிப்பு - வித்யார்த்தி மித்ரம் காமிக்ஸில் வெளிவந்துள்ள கப்பல் கில்லாடிகள் ( 1975 - ம் வருடம் செப்டம்பர் மாதத்தில், வேதாளர் கதை