Posts

Showing posts from March, 2009

பயங்கர புயல் - இயற்கையின் சீற்றத்தை துல்லியமாக காட்டியிருக்கும் ஒரு மகத்தான சித்திரக் கதை

Image
டாகோ-டாகோ என்னும் அழகிய தீவில் இந்த கதை தொடங்குகிறது. அங்கு ஓய்வெடுக்க வந்து சேரும் பிரின்ஸ் குழுவினர் பார்னேயின் பழைய அடிதடி நண்பர் லோபோவை சந்திக்க நேர்கிறது. லோபோ ஒரு தீவை சூதாட்டத்தில் ஜெயித்த விவரத்தை சொல்லி அந்த தீவிற்கு அழைத்து செல்கிறார். அந்த தீவினை உரிமை கொண்டாடும் அண்ணன்-தங்கை டெட்டி மற்றும் கிறிஸ்டி இருவரும் அங்கு வசிக்கும் கானக வாசிகளை துணையாக வைத்துக் கொண்டு தீவில் வசிக்கிறார்கள். பிரின்ஸ் குழு மற்றும் லோபோவினை அந்நியர்களாக நினைத்து அவர்களை விரட்டியடிக்க நினைக்கும்போது, டெட்டி தவறி கடலில் விழுந்து விடுகிறான். அந்த தீவின் கரையோரத்தில் வசிக்கும் ஒரு ராட்சஸ ஜந்து ஒன்று அவனை துரத்துகிறது. அதிலிருந்து பிரின்ஸ் அவரை காப்பாற்றுகிறார். தன் உயிரை காத்த நன்றிக் கடனாக சமாதானமாகும் டெட்டி அவர்களுடன் சேர்ந்து தொல்லை கொடுத்து வரும் அந்த ராட்சஸ ஜந்துவை கொல்ல ஆயத்தமாகிறார்கள். அந்த ஜந்துக்கு நிறைய கடல் மீன்களை உணவாக போட்டு அது அரை மயக்க நிலையில் இருக்கும்போது வேட்டையடலாம் என்ற திட்டத்துடன் இருக்கும்போது, அந்த தீவில் வசிக்கும் காட்டுவாசிகளின் தலைவன் இவர்களின் குறுக்கீட்டினை