நியுயார்க்கில் மாயாவி
1970- களில் சித்திரக் கதைகளை வாசித்த அனைத்து சிறியவர்களுக்கும், பெரியவர்களுக்கும் இரும்புக்கை மாயாவி நன்கு பரிச்சயமானவர். மாயாவியின் இரும்புக் கரம் மின்சாரத்தை தொட்டதும், அவரது உடல் முழுவதும் மறைந்து, இரும்புக்கை மட்டும் பிறரது பார்வையில் தென்படும். இந்த அபூர்வ சக்தியைக் கொண்டு, பல விசித்திர ஜந்துக்களையும், பல விசித்திர வில்லன்களையும் அழித்து, நாட்டை பல முறை அழிவிலிருந்து காப்பாற்றியுள்ளார். ஆனால்? ஆரம்பக் காலத்தில் இரும்புக் கை மாயாவியே நாட்டிற்கே பெரும் அச்சுருத்தலாக விளங்கியுள்ளார். அதன் கதை தான் இந்த நியுயார்க்கில் மாயாவி ...
புரபஸர் பாரின்ஜரின் ஆய்வுக் கூட, விபத்தொன்றில் சிக்கிக் கொள்ளும், அவரது உதவியாளர் கிராண்டேலுக்கு(மாயாவி) எதிர்பாராத விதமாக அரூரபமாகும் சக்தி கிடைக்கப் பெறுகிறது. அதன் சக்தியைக் கொண்டு, உலகை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக, முதலில் ஒரு வங்கியை கொள்ளையடித்தும், பின்னர் தொடர் விபத்துக்களை, நிகழச் செய்தும், அதன் மூலமாக பொது மக்களையும், அரசாங்கத்தையும் அதிர்ச்சியடையச் செய்கிறார் மாயாவி. இறுதியாக தனது அற்புத ஆற்றலை உலகிற்கு நிரூபிப்பதற்காக, நியுயார்க் நகரில் மிகச் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வைத்து, பனிரெண்டு மணி நேரத்திற்குள் நகரத்தை தகர்க்கப் போவதாக அரசாங்கத்தை மிரட்டுகிறார்.
இந்த விறு விறுப்பான சித்திரக் கதையை உருவாக்கியவர்கள் –
கென் பல்மர் & ஜீசஸ் ப்ளாங்கோ.
சிறப்பான கதைச்சுருக்கம். என்னை பொருத்தவரை இதுதான் மாயாவியின் Best கதை :).
ReplyDeletePathivu arumai!
ReplyDeleteInnum niraiya kathaikalai pathri eluthunkal!..
Very Nice Post. Best wishes...
ReplyDeleteகிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு படித்தது! என்னிடம் இந்த புக் இருக்கிறதா என நினைவில்லை! அந்நாளில் ரொம்ப ரசித்தாய் நினைவு!!
ReplyDeleteமிக மிக நேசித்த நேசிக்கும் காமிக்ஸ் இது நண்பரே! பதிவுக்கு நன்றி. அடிக்கடி வாங்க!
ReplyDeleteஅருமையான பதிவு நண்பரே,
ReplyDeleteமிக அரிதான புத்தகம்.
பதிவிற்கு நன்றி.